மருதமுனை அக்பர் கிராமத்தில்அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை




பி.எம்.எம்.ஏ.காதர்-

தேசிய சுனாமி அனர்த்த வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலக பிரிவில் உள்ள மருதமுனை,பெரியநீலாவணை,அக்பர் கிராம பிரதேச மக்களுக்கான அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்வு இன்று(05-11-2017)அக்பர் கிராம முன்னெச்சரிக்கை கோபுரத்திற்கருகில் 2.00 மணி தொடக்கம் 3.15மணிவரை நடைபெற்றது.

இங்கு முன்னெச்சரிக்கை கோபுரத்தில் இருந்து எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.இதில் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களும்,விஷேட அதிரடிப்படையினரும்,கடற்படையினரும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -