மோடிக்கு எதி­ராக கை அல்­லது விரலை நீட்­டினால் அதனை வெட்ட வேண்டும்

 பிர­தமர் மோடிக்கு எதி­ராக கை அல்­லது விரலை நீட்­டினால், அதனை வெட்ட வேண்டும் என பீஹார் மாநில பா.ஜ.க. மூத்த தலை­வரும், எம்.பி.யுமான நித்­யானந்த் ராய் பேசி­யது சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

பாட்­னாவில் துணை முதல்வர் சுஷில் மோடி பங்­கேற்ற கூட்­டத்தில், பீஹார் மாநில பா.ஜ.க. மூத்த தலை­வரும், உஜி­யார்ப்பூர் தொகுதி எம்.பி.யுமான நித்­யானந்த் ராய் பேசி­ய­தா­வது: ஏழை குடும்­பத்தில் பிறந்த ஒருவர் கடு­மை­யான உழைப்­பினால் பிர­த­ம­ரா­ன­தற்கு அனை­வரும் பெரு­மைப்­பட வேண்டும். பிர­தமர் மோடிக்கு எதி­ராக யாரா­வது கை அல்­லது விரலை நீட்­டினால், நாம் இணைந்து அதனை உடைக்க வேண்டும். அல்­லது வெட்ட வேண்டும். எனது கருத்தை தேச விரோ­தி­களும், ஏழை­க­ளுக்கு எதி­ரா­ன­வர்­களும் தான் எதிர்ப்­பார்கள். ஏழை­களை காப்­ப­வ­ராக பிர­தமர் உள்ளார். பிர­தமர் ஊழல், வறுமை, கறுப்பு பணம் ஆகி­ய­வற்றை ஒழித்­துள்ளார். வேறு எந்த சக்­தி­க­ளுக்கும் நாட்டில் இட­மில்லை என்றார். அவ­ரது பேச்சு நாடு முழுதும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதற்கு எதிர்க்­கட்­சிகள் கண்­டனம் தெரி­வித்­துள்­ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -