அகில இலங்கை ரீதியில் இரு பதக்கங்கள் பெற்றுச் சாதனை படைத்த சம்மாந்துறை அல்அர்சத் மாணவன் முஜீப்!





காரைதீவு சகா-

விசேட தேவையுள்ள மாணவர்களுக்கான அகிலஇலங்கை ரீதியில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டியில் சம்மாந்துறை அல் அர்சத் மகா வித்தியாலய மாணவன் எம்.ஜ.எம்.முஜீப் இரு பதக்கங்களைப்பெற்றுச் சாதனைபடைத்துள்ளார்.

இப்போட்டி ஹோமாகம மஹிந்தராஜபக்ச விளையாட்டு மைதானத்தில் நேற்றுமுன்தினம் சிறப்பாக நடைபெற்றது.

அகிலஇலங்கைரீதியிலான இப்போட்டியில் சம்மாந்துறை மாணவன் முஜிப் உயரம் பாய்தல் போட்டியில் இரண்டாமிடத்தைப்பெற்று வெள்ளிப்பதக்கத்தையும் 15ஆயிரம் ருபாவையும் பரீதி வட்டம் வீசுதல் போட்டியில் மூன்றாமிடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கத்தையும் 10ஆயிரம் ருபாவையும் சுவீகரித்துக்கொண்டார்.

சம்மாந்துறை அல்அர்சத் மகாவித்தியாலயத்தில் ஏஎஸ்என் அனுசரணையுடன் இயங்கிவரும் விசேடதேவையுள்ள வகுப்புகளின் பிரிவுப்பொறுப்பாசிரியர் எம்.ஜ.எம்.றியாத் இதற்கான பயிற்சியினையும் ஊக்குவிப்பினையும் வழங்கியிருந்தார்.

இது தொடர்பாக வித்தியாலய அதிபர் எ.எல்.மஜீத் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக பாராட்டுநிகழ்வு நேற்று பாடசாலையில் நடைபெற்றது.

வைபவத்தில் சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்hளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் ஏஎஸ்என்என் அமைப்பின் செயலாளர் எம்.ஆர்.எம்.ஹமீம் சாதனை மாணவன் முஜீப்பின் பெற்றோர் பாடசாலை முகாமைத்துவக்குழு பொறுப்பாசிரியர் றியாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாணவனைப்பாராட்டி பேசிய பணிப்பாளர் நஜீம் பரிசும் வழங்கினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -