நாட்டு மக்கள் மீதான கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் செயற்பாட்டின் அங்கமாகவே அவர் மேற்படி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார். அவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை தென் கொரிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புலனாய்வுத் தகவல்களை வழங்கிய பின் உரையாற்றுகையில் மேற்படி தடைகள் குறித்து அறிவிப்பு செய்தார்.
“அவர் (வட கொரியத் தலைவர்) மது அருந்துதல், பாடல் பாடல் என்பவற்றுடன் தொடர்புபட்ட கூட்டங்களுக்கும் களியாட்டங்களுக்கும் தடை விதித்துள்ளதுடன் வெளி தகவல்கள் தொடர்பான கட்டுப்பாட்டை பலப்படுத்தியுள்ளார்" என தென் கொரிய தேசிய புலனாய்வு சேவை கூறுகிறது. வட கொரியாவானது சில மாதங்களுக்கு முன் நிலவிய கடும் வரட்சியான காலத்தின் போது பையொங்யாங் பியர் பானத் திரு விழாவை இரத்துச் செய்திருந்தது.