கிண்ணியா பிரதேச சபையின் கவனயீனம்! மத்திய சுற்றாடல் அதிகார சபை வழக்கு தாக்கல்!

அப்துல்சலாம் யாசீம்-

கிண்ணியா பிரதேச சபையினால் சூழல் பாதுகாப்பு உரிமமின்றி இறைச்சிக்காக விலங்குகளை கொல்லும் இடமொன்றினை நடாத்தி வருவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

கிண்ணியா-முனைச்சேனை பகுதியில் பிரதேச சபைக்கு சொந்தமான மாடு அறுக்கும் நிலையம் காணப்படுகின்றது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையைச்சேர்ந்த உத்தியோகத்தர்கள் பல தடவைகள் கள விஜயங்களை மேற்கொண்டு பரிசோதித்த வேளை இந்த மாடு அறுக்கும் இடம் சுற்றாடலுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக இணங்காணப்பட்டது.

இதுகுறித்து சுற்றாடல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கிண்ணியா பிரதேச சபைக்கு சுற்றாடல் அதிகார சபையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
ஆனாலும் கிண்ணியா பிரதேச சபை இவ்விடயத்தில் அசமந்தப்போக்குடன் கவனத்தில் கொள்ளாது தனது பணியை முன்னெடுத்து வந்ததாகவும் சுற்றாடல் அதிகார சபை குற்றம் சுமத்தியுள்ளது.

கிண்ணியா-முனைச்சேனை பகுதியில் மாடு அறுக்கும் இடம் தொடர்ந்தும் காணப்பட்டாலட சுற்றாடலுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் என்பதனை கருத்திற்கொண்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் எம்.சிவக்குமார் தெரிவித்தார்.

இதேவேளை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சார்பில் அரச சட்டத்தரணி தேவவிதுரன்,சானிகா சந்திரசேகர மன்றில் தோன்றினர்.

பிரதிவாதி சார்பில் கிண்ணியா பிரதேச சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.முகம்மதலி மற்றும் சட்டத்தரணி ஏ.எம்.முஹீத் மன்றில் தோன்றினர்.

இவ்வழக்கு விசாரணை கடந்த வௌ்ளிக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போதே
திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் இவ்வழக்கு விசாரணையை 2018ம் ஆண்டு பெப்ரவரி 22ம் திகதி ஒத்தி வைத்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -