மு.இராமச்சந்திரன்,க.கிஷாந்தன்-
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்ட்ட செனன் கே.ஜி பிரிவில் லயன் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்தினால் மூன்று குடியிருப்புகள் சேதமாகியுள்ளதாக அட்டன் பொலிஸார்
16.11.2017 காலை 10.15 மணியளவிலே தீ விபத்து சம்பவித்துள்ளது
நான்கு வீடுகளை கொண்ட குறித்த லயன் குடியிருப்பில் ஒரு குடியிருப்பு முற்றாக சேதமானதுடன் மேலும் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளது.
தீ விபத்தில் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை எனினும் வீட்டின் உபரணங்கள் சேதமாகியுள்ளது
அட்டன் பொலிஸாரும் பொதுமக்களும் அட்டன் நகரசபை தீயனைப்பு பிரிவினரும் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள்ள கொண்டுவந்துள்ளதுடன் சேத விபரம் தொர்பிலும் தீ பரவளுக்கான காரணம் தொடர்பிலும் விசாலணையை ஆரம்பித்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.


