எஸ் .எல். அப்துல் அஸீஸ-
கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட நெசவு கைத்தொழில்லாளர்களுக்கான சந்தைப்படுத்தல் அபிவிருத்தி தொடர்பான செயலமர்வு நேற்றும், இன்றும் (13,14) கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ் இரு நாள் செயலமர்வில் நெசவுக் கைத்தொழில் குறைந்த மூலதனத்தைக்கொண்டு கூடிய உற்பத்தினையினை மேற்கொள்ளல், நெசவு கைத்தொழின் சந்தைப்படுத்தல் உபாயம்கள், கணக்கு நடைமுறைகளை பேணுதல் போன்ற தலைப்புகளில் இங்கு பயிற்சிகல் வழங்கப்பட்டன.
சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எ.ஆர்.எம். சாலிஹ், தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மட் கனி அதிதியாக கலந்துகொண்டதுடன் பயிற்சி நெறிக்கான வளவாளர்களாக கணக்காளர் யு.எல்.ஜவாஹிர், கைத்தொழில் உத்தியோகத்தர் ஏ.ஏ.ஜெமீல், தொழில் அதிபர் ஏ.எம்.எம்.கபீர், திட்ட முகாமையாளர் ஏ.எம்.எஸ். நயீமா, முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.எஸ்.பரீரா, சமுர்த்தி வங்கி-வலய முகமையாளர் எம்.எம்.எம்.முபீன், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம். நௌவ்சாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.



