முன்னாள் இராஜங்க அமைச்சா் ஏ.எச்.எம். அஸ்வா் பற்றிய ஞாபகாா்த்த நிகழ்வும் அவா் பற்றிய அஸ்வா் எ பாலிமென்டேரியன் எனும் நுால் வெளியீடும் எதிா்வரும் 17 நவம்பா் 2017 வெள்ளிக்கிழமை பி.பகல். 03.30 மணிக்கு கொழும்பு 07 ல் உள்ள இலங்கை மன்றக் கல்லுாாியில் நடைபெறும்.
இந் நிகழ்வினை அவா் பதவி வகித்த அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணி, அகில இலங்கை முஸ்லீம் கல்வி மாநாடு, முஸ்லீம் மீடியா போரம் ஆகியன இணைந்து இந் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளன. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சபாநாயகா் கரு ஜயசூரிய, கௌரவ அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோா் கலந்து கொள்கின்றனா். அத்துடன் இந்திய முஸ்லிம் லீக்கின் தலைவா் பேராசிரியா் கே.எம். காதா் மொஹைதீன், உரையாற்றுவாா். அவா் பற்றிய நுாலினை அவருடைய மைத்துனரான கலாநிதி கரிஸ் இசட் டீன் தொகுத்துள்ளாா்.
மேலும் எதிா்கட்சித் தலைவா் இராசம்பந்தன், சகல முஸ்லீம் அமைச்சா்களான ரவுப் ஹக்கீம், றிசாத் பதியுத்தீன், ஹபீா் காசிம், உட்பட சகல முஸ்லீம் , பாராளுமன்ற உறுப்பிணா்களும் கலந்து கொள்கின்றனா்.
