அட்டன் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் மாற்று விவகாரம் மலையக பகுதிகளில் போராட்ட வடிவை முன்னெடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
மலையகத்தின இரண்டு பிரதான கட்சிகளில் அங்கத்தவர்கள் தமது போராட்ட வடிவங்களை மாறி மாறி பிரதான நகரங்களில் முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செளமிய மூர்த்தி தொண்டமானின் பெயரை குறித்த தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்து அகற்றியமை தவறு என்றும், தொழிலாளர் தேசிய சங்க அங்கத்தவர்கள் இந்த விவகாரத்தில் அமைச்சரவை அந்தஸ்த்து பெற்ற ஒரே ஒரு தமிழ் அமைச்சர் என்ற ரீதியில் திகாம்பரத்தின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் இ.தொ.காவினர் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர் இதற்கு எதிர்ப்பாகவே நாம் போராட்டங்களை முன்னெடுக்கின்றோம் என்று இரு சாராரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த வகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொட்டகலை நகரில் 03.11.2017 அன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டமானது அமைச்சர் திகாம்பரத்தின் பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதனால் இதனை எதிர்த்து தொழிலாளர் தேசிய சங்க அங்கத்தினர்கள் 04.11.2017 அன்று எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தினர்.
இந்த போராட்டம் கொட்டகலை பிரதேச சபை வளாகப்பகுதியிலிருந்து பேரணியாக ஆரம்பிக்கப்பட்டு சுமார் 2 கிலோ மீற்றர் தூரமாக பேரணி நடத்தப்பட்டு கொட்டகலை புகையிரத கடவை சந்தி வரை சென்று மீண்டும் கொட்டகலை விநாயகர் ஆலய முன்றலில் ஆர்பாட்டத்துடன் நிறைவு பெற்றது.
இதில் தொழிலாளர் தேசிய சங்கத்தை ஆதரிக்கும் சுமார் 100ற்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைக்காக வாசகங்கள் எழுதிய சுலோகங்களை ஏந்திய வண்ணம் கோஷங்களையும் எழுப்பி ஈடுப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.
இவ் ஆர்ப்பாட்ட பேரணியில் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், முன்னால் அம்பகமுவ பிரதேச சபை தலைவர் ஜி.நகுலேஷ்வரன் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.