குளவி கொட்டியதால் 20 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

தலவாக்கலை பி.கேதீஸ்-

லிந்துலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் கல்கந்தவத்தை தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 20 தொழிலாளர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக தெரிய வருவதாவது ஹேலீஸ் கம்பனியின் கீழ் இயங்கும் கிறெட்வெஸ்டன் கல்கந்;தவத்தை தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 15.11.2017 காலை 11 மணியளவில் தேயிலை மலையில் வேலைசெய்துக்கொண்டிருந்தபோது தேயிலை செடியின் கீழ் இருந்த குளவிக் கூடு கலைந்து இவர்களை தாக்கியுள்ளது. 

இவர்கள் உடனடியாக தோட்ட நிர்வாகத்தின்  உதவியோடு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 9 பேர் சிகிச்சைப் பெற்று தங்களது வீடுகளுக்கு திரும்பிவுள்ளதோடு 10 பெண் தொழிலாளர்கள் ஒரு ஆண் தொழிலாளி ஆக 11 பேர் வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக லிந்துலை வைத்தியசாலையின் தலைமை வைத்தியர் பிரபாஸ் கருநாயக்க தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -