லிந்துலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் கல்கந்தவத்தை தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 20 தொழிலாளர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தெரிய வருவதாவது ஹேலீஸ் கம்பனியின் கீழ் இயங்கும் கிறெட்வெஸ்டன் கல்கந்;தவத்தை தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 15.11.2017 காலை 11 மணியளவில் தேயிலை மலையில் வேலைசெய்துக்கொண்டிருந்தபோது தேயிலை செடியின் கீழ் இருந்த குளவிக் கூடு கலைந்து இவர்களை தாக்கியுள்ளது.
இவர்கள் உடனடியாக தோட்ட நிர்வாகத்தின் உதவியோடு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 9 பேர் சிகிச்சைப் பெற்று தங்களது வீடுகளுக்கு திரும்பிவுள்ளதோடு 10 பெண் தொழிலாளர்கள் ஒரு ஆண் தொழிலாளி ஆக 11 பேர் வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக லிந்துலை வைத்தியசாலையின் தலைமை வைத்தியர் பிரபாஸ் கருநாயக்க தெரிவித்தார்.