க.கிஷாந்தன்,மு.இராமச்சந்திரன் -
தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 17 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லிந்துலை கல்கந்தை தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கிலக்காகியுள்ளனர்.
இச்சம்பவம் 15.11.2017 அன்று மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 05 பேர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், 12 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆண்களும், 17 பெண்களும் அடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.



