புத்தளத்திலிருந்து தலவாக்கலைக்கு வர்த்தகத்துக்காக வந்த இளைஞன் காணவில்லையென தலவாக்கலை பொலிஸில் முறைப்பாடு




க.கிஷாந்தன்-
தீபாவளியினை முன்னிட்டு புத்தளப்பகுதியிலிருந்து தலவாக்கலைப் பகுதிக்கு வர்த்தக நடவடிக்கைக்காக வருகை தந்த இளைஞன் ஒருவர் 17.10.2017 அன்று இரவு 7.00 மணி முதல் காணவில்லையென தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல் போயுள்ளவர் புத்தளம் கந்தகுடா பகுதியைச்சேர்ந்த முகமது நிலாம்தீன் முகமது அஸ்ஜட் வயது 18 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர் கடந்த 2017.10.10 திகதி தலவாக்கலை பகுதிக்கு வருகைதந்து தலவாக்கலை நகரசபையின் கடையொன்றினை கூலிக்காக பெற்று அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் கடந்த 17 ம் திகதி இரவு கழிவறை செல்வதாக கூறிவிட்டு சென்ற இளைஞன் 18.10.2017 அன்று வரை வராதமையினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் செய்த ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞனுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -