ஆகுரோயா ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு



க.கிஷாந்தன்-
க்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ் போட்மோர் தோட்டப்பகுதியை அண்மித்த ஆகுரோயா ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் 19.10.2017 அன்று வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.

அக்கரப்பத்தனை ஆகுரோவா தோட்டத்தில் உள்ள 76 வயதுடைய மருதமுத்து பொன்னுசாமி என்பவரின் சடலமே இது என அவரின் உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

கடந்த 16ம் திகதி வெளியில் செல்வதாக வீட்டில் கூறி சென்றவர் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் இவரை காணவில்லை என அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

19.10.2017 அன்று மாலை இந்த ஆற்றில் ஒருவரின் சடலம் மிதப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சென்று பார்த்த பொழுது இவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

உடனடியாக அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் நுவரெலியா மாவட்ட பதில் நீதவான் அவ்விடத்திற்கு வருகை தந்த பின்னர் சடலம் கரைக்கு கொண்டுவரப்பட்டது. இதன்பின்னர் பதில் நீதவானால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இம் மரணம் தொடர்பாக அக்கரப்பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -