ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தில் உள்ள ஆரம்ப பாடசாலையான ஹிஜ்றா வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் மாணவர்களுக்கு கற்பிற்கு ஆசிரியர் எம்.எல்.எம்.அமீன் தன்னிடம் கற்று ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்ச்சையில் சித்தியடைந்த மாணவர்களை தனது சொந்த செலவில் பாராட்டி, கெளரவித்து, பரில்களும் வழங்கி வைத்த ஓர் முன்மாதிரியான நிகழ்வு நேற்று 22.10.2017 அமீன் ஆசிரியரின் வீட்டில் இடம் பெற்றது.
பிரதேசத்தில் உள்ள அதிபர்கள், ஆசிரியர்கள், தன்னுடன் ஒன்றாக கல்விகற்ற நண்பர்களை அதீதிகளாக அழைத்து சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் விழாவினை சிறப்பாக நடாத்தி மாணவர்களின் மனங்களை குளிரவைத்த நிகழ்வானது உண்மையில் ஏனைய ஆசிரியர்களுக்கும், பாடசாலைகளுக்கும் எடுத்துக்காட்டாகவும், முன்மாதிரியாகவும் அமைந்திருந்தனை அவதானிக்க கூடியதாக இருந்தது.
நிகழ்வின் சுருக்க காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.