கந்து வட்டியும் நொந்த பிஞ்சுகளும்

Mohamed Nizous-

ட்டி வாட்டி வைக்க
செட்டி குட்டி ஆள
செத்துப் போனார்கள்-அந்த
முத்துப் பிள்ளைகள்

கந்து வட்டி என்பது
வந்து கட்டி வாட்ட
நொந்து போன அந்த
தந்தை தாய் பாவம்
என்னையா செய்யும்
எண்ணையை ஊற்றி
தீக்குளித்துச் செத்தார்கள்-சின்னப்
பூக்களுடன் சேர்த்து

நெல்லையில் நடந்த அந்தப்
பிள்ளையின் சாவு நமக்கு
சொல்லுகின்ற செய்திகளில்
உள்ளம் நொறுங்குகிறது.

மாட்டைக் காப்பதற்கு
காட்டுகின்ற அக்கறையை
நாட்டைக் காப்பதற்கு
காட்டி ஆண்டிருந்தால்
அறியாத பிஞ்சுகள்
கரியாகி இறக்குமா?

வட்டியில்லா வங்கி முறை
கட்டி எழுப்பியிருந்தால்
சுட்டெரிக்கும் இத் தீயால்
சுட்டிச் செல்லம் சாகுமா

வட்டிக்குக் கடன் வாங்கி
கட்டிடங்கள் கட்டி அதை
கட்டிக் காப்பவரே
கட்டளையை மறக்க வேண்டாம்.

செலுத்துகின்ற வட்டி
கொளுத்திடலாம் உங்களின்
கொழுத்த செல்வங்களை
கொண்ட சொத்துக்களை

இஸ்லாம் தடை செய்த
இந்த வட்டி முறை
எந்தத் தேசத்திலும்
இல்லாது போகட்டும்
இன்னுமொரு பிள்ளை
எரியாது போகட்டும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -