


அஸீம் கிலாப்தீன்-
புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லுரியின் பழைய மாணவர் அமைப்பான சஹீரியன்ஸ் 99 குழுவினர் ஏற்பாடு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் மற்றும் மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு புத்தளம் இபுனு பதுதா மண்டபத்தில் நடைபெற்றது.
99 குழுவினர் இரண்டாவது வருடமாகவும் இந் நிகழ்வினை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர் உலகளாவிய ரீதியாக மாற்றுத்திறனாளிகளுக்காக உதவி வரும் ஜேர்மன் நாட்டை சேர்ந்த ஹேன்ஸ் பெட்டர் அவரது துணைவியார் எலிஸபத் மற்றும் இலங்கையின் இணைப்பாளர்களான ஜயசிங்க இலங்ககோன் சிதாரத் ஆகியோரின் உதவியுடன் இந் நிகழ்வு நடந்தேறியது புத்தளம் கல்பிட்டி தலுவ முந்தல், மதுரகங்குளி, கனமுல்லை, வேப்பமடு, ஆகிய பிரதேசங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இதன் மூலம்பயன் பெற்றனர்