இரண்டு முச்சக்கரவண்டிகள் நேர்க்கு நேர் மோதி விபத்து - 6 பேர் படுங்காயம்





க.கிஷாந்தன்-
ஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா பிரவுண்லோ பகுதியில் 16.10.2017 அன்று இரவு 8 மணியளவில் முச்சக்கரவண்டிகள் இரண்டு நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் படுங்காயங்களுக்குள்ளாகி மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மஸ்கெலியா - நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் மஸ்கெலியா பகுதியிலிருந்து பிரவுண்லோ நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும் மவுஸ்ஸாக்கலையிலிருந்து மஸ்கெலியா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியும் மஸ்கெலியா பிரவுண்லோ பகுதியில் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் இரு முச்சக்கரவண்டியிலும் பயணித்த 6 பேர் கடும்காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும், அதிக வேகம் மற்றும் கட்டுப்பாடு இல்லாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்துடன் தொடர்புடைய இரு முச்சக்கரவண்டிகளையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -