கடந்த காலத்தில் சிறுபான்மை சமூக தலைவர்கள் தமிழர் முஸ்லீம் மற்றும் வடக்கு தமிழர் என பிரித்து வைத்தது மடுமல்லது சிங்க பெருந்தலைவர்களிடத்திலும் மத தலைவர்களிடத்திலும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை சரியன முறையில் கொண்டு செல்லாமையினலே இன்று பிரிவினவாதம் நாட்டில் நிலவுகின்றது என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்
கொட்டகலையில் இடம்பெற்ற மலையக மக்கள் முன்னனியின் இளைஞர் மாநாடு நிகழ்வில் விசேட அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்
மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமாகிய வே.இராதாகிருஸ்னன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தொடர்ந்து அமைச்சர் உரையாற்றுகையில் அமைச்சர் இராதாகிருஸ்னன் தன் சமுகம் சார்ந்த அகறையுடைய சிறந்த தலைவர் கடந்த கால மலையக அரசியல் தலைவர்கள் தங்களின் சமூகம் சார்ந்து சரியான போராட்டத்தை முன்னெடுத்து இருந்தால் இன்று நுவரெலிய மாவட்டத்திற்கு பிரதேச செயலகங்களை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை கடந்தகால தவறுகளை மற்றியமைக்கு சிறந்த தலைமைத்துவம் இன்று கிடைத்துள்ளது
கடந்த கால அரசியல் தலைவர்களை போல் அல்லது அமைச்சர் இராதாகிருஸ்னன் அனைவரையும் இணைத்துக்கொண்டு வெற்றிப்பயணத்தை முன்னெடுக்கும் ஒரு நல்லலென்ன நிகழ்வாக இன்றைய இளைஞர் நாட்டிடை உணர்கின்றேன் மலையக மக்களுக்கும் மலையக இளைஞர்களுக்கும் சிறந்த தலைவர் ராதாகிருஸ்னன் கிடைத்துள்ளார் அவரின் கரங்களை பலப்படுத்தி உங்களின் வெற்றியை பெற்றுகொள்ளுங்கள் என அவர் தெரிவித்தார்