20 ஆவது சட்டத்தை நிராகரிக்கிறோம் வடமாகாணம் அதிரடி முடிவு

20 ஆவது சட்டத்தை நிராகரிக்கின்றோம். அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் அது தொடர்பில் பின்னர் பரிசீலிப்போம் என வடமாகாண சபை ஏக மனதாக தீர்மானித்துள்ளது.

வடமாகாண சபை அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

குறித்த விடையம் தொடர்பில் முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த அமர்வில் 20ஆவது சட்டம் தொடர்பில் விவாதித்து அது தொடர்பிலான கரிசணைகளை உள்ளடக்கி, வடமாகாண ஆளூநருக்கு அவைத்தலைவர் கடிதம் அனுப்பி உள்ளார். அந்த சட்டவரைவை ஏற்றுக்கொள்ளவில்லை.

அதேவேளை குறித்த சட்டவரைவில் திருத்தங்கள் மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் , அது தொடர்பில் பின்னர் பரிசீலிப்போம் என தெரிவித்தார்.(டைலிசிலோன்)

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -