அட்டன் தலைமையக பொலிஸ் பரிசோதகர் உடன் இடமாற்றம்.


க.கிஷாந்தன்-

ட்டன் தலைமையக பொலிஸ் பரிசோதகர் டி.பி.கே.எம்.ஹெட்டியாரச்சி உடன் அமுலுக்கு வரும் வகையில் 04.08.2017 புத்தளம் பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பதவிக்காக அக்கரைபற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் என்று புதிய பொலிஸ் தலைமை பரிசோதகராக பொறுப்பேற்க உள்ளதாகவும் பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அட்டன் தலைமையக பொலிஸ் பரிசோதகர் உடன் இடமாற்றம்.

கடந்த எட்டு மாத்திற்கு முன் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் திகாவத்துர அவர்கள் அட்டன் சிகை அலங்கார நபர் ஒருவர் தாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் செய்த போராட்டத்தினையடுத்து முன்னாள் தலைமைய பொலிஸ் பரிசோதகர் மாற்றப்பட்டு மேற்படி பொலிஸ் தலைமை பொறுப்பதிகாரி டி.பி.கே.எம்.ஹெட்டியாரச்சி பொறுப்பேற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதே வேளை இப்பிரதேசத்தில் தகுதியானவர்கள் இருந்தும் பொறுப்பானவர்கள் இவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்காதிருப்பது குறித்தும் பொலிஸ் நிலைய உத்தியோகஸ்த்தர்கள் மத்தியில் அதிருப்தி காணப்பட்டு வருவதும் மேலும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -