காத்தான்குடி ஆதாரவைத்தியசாலையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வெளிநோயாளர் மற்றும் பல்சிகிச்சைப் பிரிவு, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விஷேட வைத்திய நிபுணர் விடுதி என்பன இன்று (13.07.2017 / வியாழக்கிழமை) காலை கிழக்குமாகாண கௌரவ முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் அவர்களினால் வைபவ ரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது.
கிழக்குமாகாணசபை கௌரவ உறுப்பினர் ஷிப்லி பாரூக் அவர்களின் கோரிக்கைக்கமைவாக கௌரவ முதலமைச்சரினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 18 மில்லியன் ரூபா செலவில் இவ்விரண்டு வேலைத்திட்டங்களும் நிறைவுசெய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்வில் கௌரவ முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களுடன் சுகாதார அமைச்சர் கௌரவ ALM.நசீர், மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாரூக் உட்பட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகளும் , பொதுமக்களும் கலந்துகொண்டார்கள்.


