திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பெண்களையும் இரண்டு ஆண்களையும் நேற்றிரவு (03) கைது செய்துள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை பிரதான பஸ் தரிப்பிடத்தில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவரையும் ஜஸ் பெக்டேரிக்கு அருகில் ஒருவரையும் அபயபுர பகுதியில் இரண்டு பெண்களையும் கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ரபுக்கல-குருனாகல் வீதியைச்சேர்ந்த எஸ்.முகம்மது (54வயது) மற்றும் திருகோணமலை.அபயபுர பகுதியைச்சேர்ந்த டி.பதுகே லக்மன் குமார (37வயது) ஆண்டாங்குளம்.பாசல் வத்தையைச்சேர்ந்த லியனகே ரஞ்சனி (40வயது) அபயபுர.டெக்டர் வத்தையைச்சேர்ந்த
ஆர்.பீ.பிரியதர்ஷனி (27வயது) எனவும் தெரியவருகின்றது.
குறித்த நான்கு பேரையும் இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.