நோட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்திரன் -
புண்ணாக்கு விலை சடுதியாக அதிகரித்துள்ளமையினால் கால்நடை வளர்ப்பு தொழில்துறையை முன்னெடுக்க முடியாதுள்ளதாக பால் உற்பத்தி பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்
பசு, மாடுகளுக்கு புல் மற்றும் புண்ணாக்கு போன்றவையே உணவாக வழங்கிவருகின்றோம் தற்போது புண்ணாக்கின் விலை 2500 ரூபாவிலிருந்து 3200 ரூபாவிற்கு உயர்ந்துள்ளது
இந் நிலையில் சடுதியான. விலை உயர்வால் பண்ணையாளர்கள் பெரும் பதிப்புக்குள்ளாகியுள்ளனர்
பால் உற்பத்தில் தொழில்துறையை தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் புண்ணாக்கிற்கு நிர்ணய விலையை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.