2014 இல் இடம்பெற்ற அளுத்கம சம்பவம் ஐ.எஸ். உடன் தொடர்புபட்டது என நாம் உறுதியாகக் கூறுகிறோம். ஐ.எஸ். உடன் இச்சம்பவம் தொடர்பு பட்டதனாலே மஹிந்த ராஜபக் ஷவோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவோ எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை. அளுத்கம சம்பவத்தின் பின்னணியில் ஞானசார தேரரே இருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டது. பொதுபல சேனா தெரிவித்துள்ளது
ஆனால் ஞானசார தேரர் அளுத்கமவுக்கு செல்வதற்கு முன்பு அங்குள்ள பள்ளிவாசலுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் கொழும்பு மற்றும் காத்தான்குடியிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்தார்கள். இச்சம்பவம் ஐ.எஸ். உடன் தொடர்பு பட்ட குழுவினராலே முன்னெடுக்கப்பட்டது.