மைதானம் ஒன்றினுள் புகுந்த அரியவகை மிருகம்


வுனியாவில் பாடசாலை மைதானம் ஒன்றில் அரியவகை மிருகம் ஒன்று புகுந்துள்ளது. அது பின்னர் நீர் நாய் என இனங்காணப்பட்டுள்ளது.

வவுனியா ஶ்ரீராம்புரம் திருஞான சம்மந்தர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்திற்குள் இன்று முற்பகல் 10 மணியளவில் அரியவகை உயிரினம் நடமாடியதை அவதானித்த பாடசாலை மாணவர்கள் அதிபரிடம் முறையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து பாடசாலை அதிபர் அப்பகுதி கிராம அலுவலரிடம் முறயிட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற கிராம அலுவலர் வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த அதிகாரிகள் குறித்த இனம் தெரியாத உயிரினம் நீர்நாய் என்று உறுதிப்படுத்தி அதனை மீட்டு அனுராதபுரம் வனஜீவராசிகள் காரியாலயத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இவ்வகை உயிரினம் வவுனியாவில் கண்டு பிடிக்கப்பட்டமை இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. (வீரகேசரி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -