வவுனியா ஶ்ரீராம்புரம் திருஞான சம்மந்தர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்திற்குள் இன்று முற்பகல் 10 மணியளவில் அரியவகை உயிரினம் நடமாடியதை அவதானித்த பாடசாலை மாணவர்கள் அதிபரிடம் முறையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து பாடசாலை அதிபர் அப்பகுதி கிராம அலுவலரிடம் முறயிட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற கிராம அலுவலர் வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த அதிகாரிகள் குறித்த இனம் தெரியாத உயிரினம் நீர்நாய் என்று உறுதிப்படுத்தி அதனை மீட்டு அனுராதபுரம் வனஜீவராசிகள் காரியாலயத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இவ்வகை உயிரினம் வவுனியாவில் கண்டு பிடிக்கப்பட்டமை இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. (வீரகேசரி)