கூட்டமைப்பின் திறந்த பேச்சு வார்த்தை கொழும்பில் - மு.காவுக்கும் அழைப்பு என்கிறார் ஹசன் அலி



முஸ்லிம் அர­சியல் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள முஸ்லிம் கூட்­ட­மைப்பின் பகி­ரங்க, திறந்த பேச்­சு­வார்த்­தையும், கலந்­து­ரை­யா­டலும் விரைவில் கொழும்பில் நடை­பெ­ற­வுள்­ளது.

இக்­க­லந்­து­ரை­யா­டலில் வட­கி­ழக்கில் அர­சி­யலில் ஈடு­பட்­டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உட்­பட அனைத்து முஸ்லிம் கட்­சி­களும் கலந்து கொள்­ளலாம் என ஏற்­பாட்­டா­ள­ரான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி பகி­ரங்க அழைப்பு விடுத்­துள்ளார். 

இந்தக் கலந்­து­ரை­யா­டலின் பின்பே கூட்­ட­மைப்பின் யாப்பு வரை­புக்­குட்­ப­டுத்­தப்­படும் என்றும் அவர் கூறினார். 

மேலும் அவர் கருத்து தெரி­விக்­கையில்; ஏற்­க­னவே அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தேசிய காங்­கிரஸ் மற்றும் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி ஆகிய கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்டு கொள்­கை­ய­ளவில் இணக்கம் காணப்­பட்­டுள்­ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் முஸ்லிம் கூட்­ட­மைப்பில் இணைந்து கொள்­வ­தென்றால் நாம் அதனை வர­வேற்­கிறோம்.

முஸ்லிம் கூட்­ட­மைப்­புக்கு வட­கி­ழக்கில் பெரும்­பான்­மை­யான மக்கள் பூரண ஆத­ர­வினை வழங்­கி­யுள்­ளார்கள். முஸ்லிம் கூட்டமைப்பு அரசியலில் பாரிய மாற்றமொன்றினை உருவாக்கும் என்ற நம்பிக்கையுண்டு என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -