உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதை தவிர்க்க சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்

ள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தாதிருப்பதானால், மக்கள் கருத்துக்கணிப்பு அல்லது நீதிமன்றத் தீர்ப்பொன்றினூடாகவே அதனைச் செய்ய முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்ததையடுத்து, தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் தேர்தல்கள் பிற்போடப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

சட்டவாக்க சபையின் தற்போதைய கட்டளைகள் மற்றும் அரசமைப்புக்கு அமைய, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தாதிருப்பதானால், மக்கள் கருத்துக்கணிப்பு அல்லது நீதிமன்றத் தீர்ப்பொன்றினூடாக மட்டுமே அதனைச் செய்ய முடியும். வேறெந்த நடவடிக்கையினூடாகவும் அதனைத் செய்ய முடியாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்காளர் பதிவுப் பட்டியலை தயாரிப்பதற்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.இந்த நிலையில், நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக, வாக்காளர் பதிவுப் பட்டியலை தாயரிக்கும் பணிகள் ஜுலை மாதம் 31 ஆம் திகதிவரை இடம்பெறும்.பாதிக்கப்பட்ட மக்களுக்காக உரிய மாவட்ட செயலகங்களின் பரிந்துரைகளுக்கமைய உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -