நாவலபிட்டியில் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலை தீக்கிரை



நாவலபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான தேயிலை தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.குறித்த தீ விபத்தில் தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெலம்பொட பிரதேசத்தைச் சேர்ந்த அல்ஹாஜ் ராஸிக் என்பவர்க்குச் சொந்தமான “DONSIDE” எனும் தேயிலை தொழிற்சாலையே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

குறித்த தீ எவ்வாறு பரவியது என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. நேற்றைய தினம் விடுமுறை தினம் என்பதால் தொழிற்சாலை மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -