கட்டார் மீதான தடையானது மனிதாபிமான ரீதியிலான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்து, அதனை தளர்த்துமாறு கோரியுள்ளார்.
கட்டார் பயங்கரவாதத்திற்கு துணை போவதாக குற்றம்சாட்டி, கட்டார் நாட்டுடனான தூதரக உறவை ஐக்கிய அரபு இராச்சியம், சவுதி அரேபியா, பஹ்ரேன், எகிப்து, யேமன் உள்ளிட்ட நாடுகள் திடீரென துண்டித்தன.
அதனை தொடர்ந்தே அமெரிக்கா இவ்வாறு அறிவித்துள்ளது.
இதேவேளை, கட்டார் பயங்கரவாதிகளுக்கு நிதி உதவிகளை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் குற்றம் சாட்டியதுடன், அதனை நிறுத்துமாறும் வலியுறுத்தினார்.
மேலும், மக்களை கொல்வதற்கு மக்களுக்கு கற்பிக்கும் செயற்பாடு நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதான குற்றச்சாட்டை கட்டார் தொடர்ந்தும் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கட்டார் பயங்கரவாதிகளுக்கு நிதி உதவிகளை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் குற்றம் சாட்டியதுடன், அதனை நிறுத்துமாறும் வலியுறுத்தினார்.
மேலும், மக்களை கொல்வதற்கு மக்களுக்கு கற்பிக்கும் செயற்பாடு நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதான குற்றச்சாட்டை கட்டார் தொடர்ந்தும் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.