கட்டார் விடயத்தில் பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலாட்டும் அமெரிக்கா

யங்கரவாதத்திற்கு ஆதரவாக செயற்படுவதாக தெரிவித்து கட்டார் மீது விதித்துள்ள தடைகளை வளைகுடா நாடுகள் தளர்த்த வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் வலியுறுத்தியுள்ளார்.
கட்டார் மீதான தடையானது மனிதாபிமான ரீதியிலான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்து, அதனை தளர்த்துமாறு கோரியுள்ளார்.

கட்டார் பயங்கரவாதத்திற்கு துணை போவதாக குற்றம்சாட்டி, கட்டார் நாட்டுடனான தூதரக உறவை ஐக்கிய அரபு இராச்சியம், சவுதி அரேபியா, பஹ்ரேன், எகிப்து, யேமன் உள்ளிட்ட நாடுகள் திடீரென துண்டித்தன. 

அதனை தொடர்ந்தே அமெரிக்கா இவ்வாறு அறிவித்துள்ளது.
இதேவேளை, கட்டார் பயங்கரவாதிகளுக்கு நிதி உதவிகளை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் குற்றம் சாட்டியதுடன், அதனை நிறுத்துமாறும் வலியுறுத்தினார்.

மேலும், மக்களை கொல்வதற்கு மக்களுக்கு கற்பிக்கும் செயற்பாடு நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதான குற்றச்சாட்டை கட்டார் தொடர்ந்தும் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -