ஊடகங்களையும் மக்களையும் கட்டுப்படுத்துமுன் அமைச்சர்களை கட்டுப்படுத்துங்கள்..!

னவாதத்தை கக்கும் அமைச்சர்களைஅரசாங்கத்தில் வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு சட்டம் போடுவதால்ஒன்றும் நடக்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார். நாம் இந்த நாட்டில் இனவாதத்தை தூண்டுவதாக கூறியவர்கள் இப்போது அவர்களின் நிர்வாணம் வெளிப்பட்டுள்ளதால்செய்வது அறியாது முழித்துக்கொண்டு உள்ளனர்.

நாட்டில் எல்லா துறைகளிலும் பிரச்சினைகள்தலை துக்கியுள்ளன. தேர்தலுக்கு முகம் கொடுக்க முடியாமல்அரசாங்கம் அதனை வருடக்கணக்கில் பிற்போட்டு வருகிறது. இனவாதத்தை கக்கும் அமைச்சர்களை அரசாங்கத்தில் வைத்திக்கொண்டு பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும்சட்டம்போடுவதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை.

நாட்டில் வரலாற்றில் இல்லாத அளவு டெங்குநோய் அதிகரித்துள்ளது.வைத்திய சாலைகளில் மக்கள் கட்டில்கள்இல்லாமல் நிலத்தில் படுத்து உறங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மத்திய வங்கியை நிர்ணயிக்க முடியாது சுகாதாரஅமைச்சை நிருவாக செய்ய தெரியாத விருதுபெற்ற நிதிஅமைச்சரும் சுகாதார அமைச்சரும் இந்த நாட்டில் மட்டுமே இருக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். இன்று அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையில் ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -