தமிழ், முஸ்லிம் உறவு ஒற்றுமைக்கு றிஷாத் அழைப்பு

மட்டக்களப்பில், அமைச்சர் றீஷாத் ஆற்றிய உரை
அனா-
கடந்த காலத்தில் எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளைப் படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார்.

லங்கா சதொசவின் 378ஆவது கிளை மட்டக்களப்பு, கொக்கொட்டிச்சோலையில், சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாகச் சேர்ந்து வாழ வேண்டும் என்று பேசுகின்றார்கள். ஆனால், தேர்தல் நோக்கங்களுக்காக, தங்களுடைய சுய நலன்களுக்காக அவர்களுடைய செயற்பாடுகளைப் பார்க்கும்போது, ஒற்றுமையை நாங்கள் காணவில்லை.இருந்த போதிலும், தமிழர்களும் முஸ்லிம்களும், தங்களுக்குள்ளே பிளவூகளை உருவாக்கிக்கொண்டு இருக்கக் கூடாது. இவ்வாறு தொடரும் பட்சத்தில்இ இரண்டு சமூகங்களுக்கு இடையிலான உறவூ, ஒருபோதும் தழைத்தோங்கப் போவதில்லை. 

நாட்டில் ஏற்பட்ட யூத்த சூழ்நிலை காரணமாக, நாங்கள் பொருளாதாரத்தை இழந்தும் உறவூகளைப் பறிகொடுத்தும் உள்ளோம். அத்துடன், அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலைமையூம் எங்களுக்கு உருவாகியூள்ளது.

காணாமல் போனோரின் உறவினHகள்இ காணாமல் போனோரைக் கண்டுபிடித்துத் தாருங்கள் எனக் கூறி வீதிகளில் தவம் இருக்கின்றனர் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -