உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்








க.கிஷாந்தன்-

ண்டாரவளை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடி 28.06.2017 அன்று ஆயிரகணக்கான மக்கள் நகரின் மத்தியில் பதாதைகளை ஏந்தியும், கறுப்பு கொடிகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியவாறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தினால் தமது வீடுகளுக்கும், சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாதிப்புகள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கோரியும் மற்றும் சேதத்திற்கான நேர்த்தியான கொடுப்பனவுகள் இன்மை காரணமாகவும் அவர்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையால் நகரின் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதோடு, பொது போக்குவரத்து சேவைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உமா ஒயா திட்டத்தினால் நீர் ஊற்றுக்கள் வற்றியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். அத்தோடு 4000 கிணறுகள் வரை வற்றிபோயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பாரிய நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உமா ஓயா திட்டமானது கடந்த 2009ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -