வர்த்­தக நிலை­யங்கள் தீக்கிரை : செவிடன் காதில் ஊதிய சங்­கு­போன்றே நிலைமை உள்­ளது

ரவுப் ஹக்கீம் 
முஸ்லிம் சமூ­கத்­தி­னரின் வர்த்­தக நிலை­யங்கள் தீயி­டப்­ப­டும்­போது, காப்­பு­றுதி தொகையைப் பெறு­வ­தற்­காக உரி­மை­யா­ளர்­களே தீ வைத்துக் கொள்­கின்­றனர் என சட்­டத்தை நிலை­நாட்டும் அதி­கா­ரிகள் கூறு­கின்றனர். முஸ்­லிம்கள் மீதான தாக்­குதல் சம்­ப­வங்­களை முறை­யிட்­ட­போதும் செவிடன் காதில் ஊதிய சங்­கு­போன்றே நிலைமை உள்­ளது என அமைச்சர் ரவுப் ஹக்கீம் சபையில் குற்­றஞ்­சாட்­டினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்ற செவ்­வாய்க்­கி­ழமை ஜெனீவா தீர்­மானம் குறித்த சபை ஒத்­து­ழைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­வத்தில் கலந்து கொண்ட உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், 

ஜெனீவா தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்டு ஒரு வரு­டமும் ஒன்­பது மாதங்­களும் நிறை­வ­டைந்­துள்­ளன. இக்­காலப் பகு­தியில் முன்­னெ­டுக்­கப்­பட்ட விட­யங்கள் குறித்து நாம் ஆராய்ந்து பார்க்­க­வேண்டும். நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் அரசு எதிர்­கொண்ட சவால்கள் பற்­றியும், கடந்­து­வந்த பாதை பற்­றியும் ஆய்­வு­செய்ய வேண்டும்.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் இலங்­கையில் நல்­லி­ணக்­கத்தை ஊக்­கப்­ப­டுத்­து­வது, பொறுப்புக் கூறலை உறு­திப்­ப­டுத்­து­வது என்ற தொனிப்­பொ­ரு­ளி­லேயே ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில் பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. எனவே, இவ்­வி­ட­யத்தில் ஐ.நா மனித உரி­மைகள் பேரவை உறு­தி­யாக இருக்­கின்­றது. 

இங்­குள்ள சகல தீர்­மா­னங்­க­ளுக்கும் ஒரே தலைப்­புத்தான் வழங்­கப்­பட்­டுள்­ளன. நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூறல் ஆகிய தலைப்­புக்­களே காணப்­ப­டு­கின்­றன. இந்த விட­யங்கள் தொடர்பில் தான் சில அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளன. 

சிலர் சட்­டங்­களில் இருந்து வதி­வி­லக்­கினைப் பெற்­றுக்­கொள்­கின்­றார்கள். அதற்கு இட­ம­ளிக்­க­கூ­டாது அடுத்து எவ்­வா­று முன்­னோக்கிச் செல்­லப்­போ­கின்றோம் என்று சிந்­திக்க வேண்டும். சர்­வ­தேச சமூ­கத்தின் ஆத­ரவைப் பெற்­றுக்­கொண்டு எப்­படி பய­ணிக்கப் போகின்றோம் என்று சிந்­திக்க வேண்டும்

அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் பணிகள் இடம்­பெற்­று­வரும் சுழ்­நி­லையில், மத ரீதி­யான சகிப்புத் தன்­மை­களை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான விட­யங்­களும் அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­பட வேண்டும். நாட்டில் தேவை­யற்ற குழப்­பத்தை ஏற்­ப­டுத்த முயற்­சிக்கும் தரப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக அர­சாங்­கமும், சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் அதி­கா­ரி­களும் விரைந்து நட­வ­டிக்கை எடுப்­பது அவ­சியம். 

சில சக்­திகள் நாட்டில் மீண்டும் குழப்­பத்தை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றன. இந்த சக்­திகள் தற்­பொ­ழுது வெறுக்­கத்­தக்க பேச்­சுக்­களை பரப்பி வரு­கின்­றன. இத­னுடன் தொடர்­பு­பட்ட குற்­ற­வா­ளிகள் பாது­காக்­கப்­ப­டு­கின்­றனர். இன்று வெ ளியா­கி­யுள்ள (நேற்று) வீர­கே­சரி பத்­தி­ரி­கையின் தலைப்­புச்­செய்­தியில் மூன்று பௌத்த அமைப்­புக்கள் மதத்தின் பெயரால் வெறுப்பை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான கருத்­துக்­களை வௌியிட்­டி­ருக்­கின்­றது. இவ்­வா­றான வெறுப்பை ஏற்­ப­டுத்தும் பேச்­சுக்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான சட்­டங்கள் அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.

நுகே­கொட விஜ­ய­ராம பகு­தியில் முஸ்லிம் ஒரு­வரின் வர்த்­தக நிலை­யம் தீயி­டப்­பட்­டுள்­ளது. சைக்கிள் ஒன்றில் வந்த நபர் ஒருவர் தீயிட்­டு­விட்டு ஓடிச் செல்­வது சீ.சி.ரி.வி கம­ராக்­களில் பதிவாகியுள்ளன. இவ்வாறிருக்கையில் உரிமையாளர் காப்புறுதியைப் பெறுவதற்காக தனது கடைக்கு தீயிட்டுக் கொண்டதாக சட்டத்தை நிலைநாட்டும் அதிகாரிகள் கூறுவது வேடிக்கையானது 

ஏத்தனையோ சம்பவங்கள் தொடர்பில் நாங்கள் சுட்டிக்காட்டுகின்றபோதும் சட்டரீதியான நடவடிக்கையை எடுக்காமலிருப்பதானது, செவிடன் காதில் ஊதிய சங்காக காணப்படுகின்றது என்றார். 
கேசரி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -