மண்சரிவு அபாயத்தின் காரணமாக 20 பேர் இடம்பெயர்வு







க.கிஷாந்தன்-

ம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட அட்டன் டிக்கோயா பெரிய மாணிக்கவத்தை தோட்டம் 2ம் பிரிவில் மண்சரிவு அபாயத்தின் காரணமாக 03.06.2017 அன்று 04 குடும்பங்களை சேர்ந்த 20 பேர் இடம்பெயர்ந்து குறித்த தோட்டத்தில் உள்ள பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பெய்து வரும் கடும் மழையினால் 03.06.2016 அன்று விடியற்காலை 5 மணியளவில் குறித்த வீடுகளில் இரண்டு வீடுகளின் பின்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், பாரிய வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டு வீடுகளுக்கு மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதனால் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனால் இக்குடியிருப்பு பகுதியில் வசித்த இவர்களை பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயருமாறு இயற்கை அனர்த்த முகாமைத்துவம் மற்றும் அம்பகமுவ பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தோட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டதையடுத்து இவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவு பொருட்களை தோட்ட நிர்வாகம் மற்றும் பொது மக்கள், முக்கிய அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -