நுவரெலியா மாவட்டத்தில் 12 பிரதேச செயலகங்களாக உயர்வு பெரும் - அமைச்சர் மனோ

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
ட்டன் டிக்கோயா நகரசபை வெகு விரைவில் மாநகரசபையாக மாற்றம் பெரும் அதே போல நுவரெலியா மாவட்டத்தில் 12 பிரதேச செயலகங்களாக உயர்வு பெரும் என தமிழ் முற்போக்கு கூட்டனியின் தலைவர் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார் ஹட்டன் ரயில் நிலையம் மற்றும் புதிய கடைத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் 

450 மில்லியன் ரூபா நிதி செலவில் நிர்மாணிக்கப்படும்! நவீன பலநோக்கு கட்டிடத்தொகுதி அடிக்கல் நாட்டும் நிகழ்வு 18.06.2017 மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்றது 

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மனோகணேசன் மலையக சமூகத்திற்கு பாரிய வரலாறும்.கலாச்சாரமும். இருக்கிறது தமிழ் முற்போக்கு கூட்டனியின் உறுவாக்கத்தின் பின் எமது சமூகம் தலை நிமிர்ந்து சுய மரியாதையுடன் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது அதன் ஒரு கட்டமே இன்றைய அடிக்கல் நாட்டும் நிகழ்வு விரைவில் ஹட்டன் டிக்கோயா நகரசபையும் தலவாக்கலையும் மாநகரசபையாக மாற்றம் பெரும் இதுவரை நகரசபை தலைவர்களே இருந்தனர் மாநகரசபையானப்பின் மேயர்களே எமக்கு கிடைப்பார்கள் இதையும் எதிர்காலத்தில் சிலர் தான்தான் செய்ததாக செல்வாகள் அவ்வாறு செய்வதாயின் 40 ஆண்டுகள் அமைச்சராக இருந்தபோது செய்திருக்க வேண்டும் தற்போது நாங்கள் செய்கின்றோம் நீங்கள் வேடிக்கை மட்டும் பாருங்கள் என சொல்லி வைக்க விரும்புகிறேன் இன்று நாங்கள் தேசிய இனமாக அடையாளப்படுத்தி வருகிறோம் தற்போது வட மாகாணத்தில் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது அவை விரைவில் சமரசமடையவேண்டும் தமிழ் மக்கள் நிம்மதியோடு வாழ வேண்டும் என்பது தமிழ் முற்போக்கு கூட்டனியின் எதிர்பார்ப்பாகவுள்ளது நமது சமூகம் அபிவித்தியடைந்து வருகின்றது வீட்டுத்திட்டம் பாதை அபிவிருத்தி.கல்வி.காணி உரிமை போன்ற விடயங்களில் நாம் அபிவிருத்தியடைந்து வருகின்றோம் தொடர்ந்தும் நாம் ஒற்றுமையுடன் இருந்து எமது அரசியல் ரீதியான உரிமைகளை வென்றெடுப்போம் என்றார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -