இந்த நாட்டு மக்களாகிய நாம் மொழியாலும்,இனத்தாலும் மததாலும் வேறுபட்டிருந்தாலும் தேசம் என்ற வகையில் இது நம் அனைவரினதும் நாடு,நம் நாட்டிற்கோர் துன்பம் என்றால் அது நம் அனைவருக்குமான துன்பம் என்பதையும் நாம் அறிவோம்,
தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பச்சிளம் குழந்தைகள்,சிறார்கள்,இளைஞர்கள்,கர்ப்பிணித்தாய்மார்கள்,முதியோர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்,
நமக்கு இவர்களின் இழப்பை பணத்தாலோ பொருளாலோ அல்லது வார்த்தைகளாலோ ஈடு செய்ய முடியாது,
ஆனால் இவ்வாறான அனர்த்தங்களுக்கு தயாராகும் முன்னாயாத்த நடவடிக்கைகள் இந்த நாட்டில் முன்னெடுக்கப்பட வேண்டும்,அது மாத்திரமன்றி சட்டவிரோத குடியிருப்புக்கள்,மற்றும் சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகளை தடுப்பதற்கான பொறிமுறையொன்றை ஸ்தாபித்து நடைமுறைப்படுத்த வேண்டும்,
எமக்கு இயற்கை அனர்த்தங்களை தடுக்க முடியாவிடினும் அதனூடான உயிரிழப்புக்களை குறைக்க முடியும் என நம்புகின்றேன்,
பலர் தமது வீடு வாசல்களை இழந்து நிர்க்கதி நிலைக்கு உள்ளாகியுள்ளனர்,
இவர்களுக்கு உதவுவதற்கு இலங்கையர்களான நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்,
பாதிக்கப்பட்ட எமது சகோதர மக்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளை முடிந்தவரை வழங்குமாறு கிழக்கு மாகாண மக்களிடம் வினயமாக வேண்டி நிற்கின்றேன்,
பலர் முன்கூட்டியே உதவுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை எமது நாட்டு மக்களின் மனித நேயத்திற்கு அடையாளமாக திகழ்கின்றது,
அனர்த்தங்களின் போது இன மத பேதமின்றி உதவிக்கரம் நீட்ட அனைவரும் ஒன்று பட்டு நிற்கும் போது இது தான் நம் நாட்டின் பலம் என்பதை எம் அனைவருக்கும் புரிய வைக்கின்றது,
அனர்த்தங்காளால் நிர்க்கதிக்குள்ளானவர்களின் வாழ்வைக் கட்டியெழுப்ப அரசாங்கம் துரித நடவடிக்ககைகளை முன்னெடுக்க வேண்டும்
கிழக்கு மாகாண முதலமைச்சர்
ஹாபிஸ் நசீர் அஹமட்