ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
தற்போது கிழக்கில் நிலவும் வறட்சியான கால நிலையில் தண்ணீரைச் சேமித்து வைத்து பொது மக்கள் குடி நீரை இலகுவாகப் பெற்றுக் கொள்ளும் வகையில் பொது அமைப்புக்களுக்கு இலவசமாக தண்ணீர்த் தாங்கிகள் விநியோகிக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பாளர் செய்னுலாப்தீன் ஹிதாயத்துல்லாஹ் தெரிவித்தார்.
ஏறாவூரின் எல்லைப் புறத்தில் இயங்கி வரும் அபூபக்கர் சித்தீக் பள்ளிவாயல், அறபுக் கல்லூரி, ஜாமியா ஆயிஷா சித்தீக்கியா அறபுக் கல்லூரி ஆகிய நிறுவனங்கள் தங்களது அத்தியாவசிய தேவையான குழாய்க்கிணறு மற்றும் தண்ணீர்த் தாங்கிகளைப் பெற்றுத் தருமாறு முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்திருந்ததற்கு அமைவாக திங்கட்கிழமை 29.05.2017 அந்த பொது அமைப்புக்களுக்கு தண்ணீர்த் தாங்கிகள் விநியோகிக்கப்பட்டதோடு குழாய் நீர் இணைப்பிற்கான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன.
முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின் தனிப்பட்ட நிதி அனுசரணையில் அல்-இஹ்சான் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினூடாக வசதி குறைந்த மக்களுக்கான குடிநீர் இணைப்புக்கள் மற்றும் குழாய்க் கிணறுகள் அமைத்துக் கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.