கல்குடாவில் - மதுபான ஆலை நிர்மாணப் பணிக்கு எதிராக ஆர்பாட்டம்.!

WM Mendis & Company க்கு எதிராக SLTJ - மட்டக்களப்பு மாவட்டம் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று மதியம் 01.00 மணிக்கு ஓட்டமாவடி பிரதான வீதியில் நடைபெற்றது.  சிறப்பாக நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தை ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் - மட்டக்களப்பு மாவட்டம் ஏற்பாடு செய்திருந்தது. ஜமாத்தின் துணை செயலாளர் கபீர் மற்றும் மாவட்ட சமூகசேவை செயலாளர் சலாஹுத்தீன் ஆகியோர் கோஷங்களை எழுப்பினார்கள். 

தவ்ஹீத் ஜமாத் தலைவர் சகோ. ரஸ்மின் MISc தமிழ் மொழியிலும் ஜமாத்தின் பேச்சாளர் சகோ. அப்துர் ராஸிக் B.Com அவர்கள் சிங்களம் மற்றும் ஆங்கில மொழியிலும் மதுபான ஆலைக்கு எதிரான கண்டன உரைகளை நிகழ்த்தினார்கள். ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்ட இவ்வார்ப்பாட்டத்தில் பவுத்த மத குருவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். -அல்ஹம்து லில்லாஹ்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -