அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, விஜேதாச ராஜபக்ஷ இருவரையும் பதவி நீக்கவும்-சதுர சேனாரத்ன

ழல் மற்றும் மோசடிகளை மறைப்பதற்கு துணை போகும் சாகல ரத்நாயக்க, விஜேதாச ராஜபக்ஷ இருவரையும் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கவேண்டும் என, அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரான ராஜித சேனாரத்னவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான சதுர சேனாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே இன்றையதினம் (திங்கட்கிழமை) இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஊழல் மற்றும் மோசடிகளுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதாக வாக்களித்து இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

அதற்கான காரணம் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இருவரும் ஊழல், மோசடிகளில் தொடர்புடைய அரசியல்வாதிகளைப் பாதுகாக்கும் நோக்கில் செயற்படுகின்றமையாகும்.

எனவே அவர்கள் இருவரும் வகிக்கும் அமைச்சுப் பதவிகளிலிருந்து இருவரையும் பதவி நீக்க வேண்டும். இதனை நான் மட்டுமன்றி சிவில் சமூக அமைப்புகளும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளன” என சதுர சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.(ஆ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -