கொழும்பில் வேவுபார்க்க வந்த சீன நீர்மூழ்கிக் கப்பல் - ஆனால் நடந்தது என்ன..?

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே, கொழும்பு துறைமுகத்தில் தமது நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று தரித்து நிற்க்க சீனா இலங்கையிடம் அனுமதி கோரியுள்ளது. இதனை முதலில் இலங்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது உண்மைதான். ஆனால் பின்னர்தான் இந்திய பிரதமர் கொழும்பு வருவது தொடர்பான விடையத்தையும் இதனையும் அவர்கள் ஒப்பிட்டு பார்த்து உடனே அனுமதி தர மறுத்துவிட்டார்கள்.

ஆனால் இதனை இந்தியா போன்ற நாடுகள் மிகவும் உண்ணிப்பாக அவதானித்துள்ளது. மோடி கொழும்பிற்கு வர முன்னரே தனது நீர் மூழ்கிக்கப்பலை கொழும்பில் நிறுத்தி ஓசைபடாமல் வேவுபார்க்க , சீனா தயாராக இருந்துள்ளது. அதுபோக இந்திய பிரதமருக்கு வழங்கப்படும் 3 அடுக்கு பாதுகாப்பு. அதன் வியூகம். அவர்கள் பாவிக்கும் தொலைதூரக் கருவிகள். ஸ்கேனர்கள் என்ன என்று பல விடையங்களை அருகில் இருந்தபடியே சீனா அறிய முயற்ச்சி ஒன்றை மேற்கொண்டு உள்ளது.

ஆனால் அது பலனளிக்காமல் போய்விட்டது என்கிறார்கள். சீனா தனது கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்துவது தொடர்பாக இலங்கையிடம் கேட்ட விடையத்தை இலங்கை அரசு மறைக்க முடியாமல் நேற்றைய தினம் அதனை வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -