திருகோணமலை நகர்பகுதியில் கஞ்சா வைத்திருந்த நபருக்கு விளக்க மறியல்

அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை நகர்பகுதியில் 01 கிலோ 450 கிரேம் கேரளா கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 52 வயதுடைய சந்தேக நபரை எதிர்வரும் ஜூன் மாதம் 06ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (30) திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க உத்தரவிட்டார்.

திருகோணமலை.சமுத்ரா கம பகுதியைச்சேர்ந்த தொன் பிரேம சந்திரவிக்ரம நாயக்க காமினி (52வயது) என்பரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கருவாடு கடை நடாத்திக்கொண்டிருப்பதுடன் கஞ்சா போதைப்பொருளும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருகோணமலை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கும் தலைமைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கும் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சுறறிவளைப்பை மேற்கொண்ட போதே இச்சந்தேக நபரிடமிருந்து 1கிலோ 450 கிரேம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் இச்சந்தேக நபருக்கு கஞ்சா போதைப்பொருள் தொடர்பில் ஏற்கனவே 07 வழக்குகள் உள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -