க.கிஷாந்தன்-
அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் தோட்ட அண்மித்த பகுதியில் வீதியில் பாரிய மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இச்சம்பவம் 30.05.2017 அன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அதேவேளை பிரதான வீதியில் ஒரு பகுதியில் இம்மரம் முறிந்து விழுந்ததில் இவ்வீதியின் போக்குவரத்திற்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
எனினும் அப்பகுதியில் இருந்த தொழிலாளி ஒருவர் உடனடியாக மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுப்பட்டார்.
தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதனால் வாகனங்களை வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செலுத்த வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.