ஏறாவூர் நகர; பிரதேச அபிவிருத்தி இணைப்புக் குழுக் கூட்டம்..!

ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
ட்டக்களப்பு, ஏறாவூர் நகர பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (18.05.2017) காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களான அரசியல் தலைமைகள் மற்றும் அரச கூட்டுத்தாபன, திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பிரதேசத்தில் அமுல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் பின்னடைவுகள் மற்றும் எதிர்காலத்தில் அமுலாக்கவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய அறிமுகமும் அனுமதிகளும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -