நிந்தவூர் கூட்டத்திற்கு பகிரங்க அழைப்பு விடும் செயலாளர் ஹசன் அலி

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து நான் வெளியேற்றப்படதாகவோ அல்லது வெளியேறியதாக கூறப்படுகின்ற செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாது. இது போன்ற பல பொய்யான வதந்திகளை ஒரு சிலரால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதினால் மக்கள் மத்தியில் குறித்த வதந்திகள் தீவிரமாக பரவிவருகின்றது.

எனவே என்னுடைய நிலைப்பாட்டினையும், முஸ்லிம் காங்கிரசின் தலைமையானது தனக்கு செய்துள்ள துரோகத்தினையும், இரண்டு வருடகாலமாக கட்சியின் தலைமைக்கும் தனக்கும் இடையில் இடம் பெற்ற பிரச்சனைகள் சம்பந்தமாக தெளிவினை மக்கள் முன் வெளிப்படுத்துவதற்காக நாளை வெள்ளிக்கிழமை 03.03.2017 மாலை நிந்தவூரில் பொதுக்கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கின்றார் முன்னாள் முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் ஹசன் அலி.

மேலும்..இவ்வாறான சூழ் நிலையில் குறித்த பொதுக்கூட்டத்திற்கு ஏற்கனவே முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலுள்ள உயர் மட்ட உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு, தேசிய ரீதியில் பல பிரதேசங்களில் 1987ம் ஆண்டு தொடக்கம் வாழ்ந்து வரும் கட்சியின் உண்மையான போராளிகள் அனைவரும் அக்காலகட்டத்தில் எந்த உணர்வோடு முஸ்லிம் காங்கிரசிற்காக அணி திரண்டு ஒருமித்த குரலில் செயற்பட்டார்களோ அவ்வாறே நாளை இடம் பெறுகின்ற கூட்டத்திலும் கலந்து கொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுப்பதாக முன்னாள் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவிக்கின்றார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -