நூர்தீன் பௌசர்-
பொத்துவில் அல் மினா வித்தியாலயத்தின் அதிபராக எம்.ஏ. தாஜகான் அவர்கள் இன்று கடமையினை பொறுப்பேற்றுள்ளார்.அல்மினா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல். நிசார் அவர்கள் அஸ்ஸாதிக் வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றதன் நிமித்தம் புதிதாக அதிபர் சேவையினுள் உள்வாங்கப்பட்ட தாஜகான் அவர்கள் அல்மினாவுக்கு அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிதாக அதிபராக நியமிக்கப்பட்டுள்ள தாஜகான் அவர்கள் ஆரம்ப, உயர்கல்வியினை பொத்துவில் அல்கலாம் வித்தியாலயம், பொத்துவில் மத்திய கல்லூரியில் கற்று 2002 இல் இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டு கலைமாணி பட்டத்தை பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் பட்டப்பின் கல்வி டிப்ளோமா தேசிய கல்வி நிறுவகத்திலும், முதுமாணி - (தமிழ்) பட்டத்தை மதுரை காமராசன் பல்கலைக்கழகத்திலும், கல்வி முதுமாணி(எம்.யிடி) பட்டத்தை கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்து வெற்றிகரமாக நிறைவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது 34 ஆவது வயதில் அதிபராக நியமனம் பெற்றுள்ள இவர் பொத்துவில் அல்இர்பான் மகளிர் கல்லூரியில் 2008.08.01 பட்டதாரி ஆசிரியராக கடமையேற்று பொத்துவில் பிரதேச மாணவர்கள் மாத்திரமன்றி மொனராகல, கணுல்வல, பக்கினிககவெல, அநுராதபுரம், தர்கா டவுன் ஆகிய இடங்களிலும் மாணவர்களுக்கு தமிழ் பாடத்தை கற்றுக் கொடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கவிஞர், ஊடகவியலாளர், சமாதான நீதவான் என பல்வேறு தளங்களில் சமூக சேவையாற்றி வருகின்ற இவர் பின்தங்கிய பிரதேசமான செங்காமம் அல் மினா வித்தியாலயத்தை சிறந்த முறையில் வளர்ச்சிக்கு இட்டுச் செல்வார் என்பது கல்விப்புலத்தில் இருப்பவர்களின் கருத்தாகும். அந்தவகையில் இவர் சேவை தொடர வாழ்த்துகின்றோம்.