காரைதீவு நிருபர் சகா
கல்வியமைச்சின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெற்றுவரும் கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் காரைதீவு விபுலானந்தா மத்தியகல்லூரி மாணவர்கள் மூவர் சாதனைபடைத்துள்ளனர். விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் செல்வன் சுந்தரலிங்கம் ஹேதுர்ஜன் (தரம்6)கல்முனை வலயமட்டத்தில் முதலிடம்பெற்று கிழக்குமாகாண மட்டப்போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.
இதேவேளை கணித ஒலிம்பியாட் போட்டியில் தட்சணாமூர்த்தி யதுர்சன்(தரம் 11) மற்றும் புவனேந்திரன் வேணியன்(தரம்8) ஆகிய இரு மாணவர்களும் மாகாணமட்டப்போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.
பாடசாலையின் பெருமையினை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டிய இவர்கள் மூவருக்கும் கல்லூரி அதிபர் தி.வித்யாராஜன் பாராட்டுத்தெரிவித்து வாழ்த்தியுள்ளார்.