ஏ.எம்.கீத் திருகோணமலை-
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளிக்குடியிருப்பு பிரதேசம் சின்னக்குளம் பகுதியில் வசிக்கும் பூபாலசிங்கம் சந்திரமதி (வயது-37) என்பவரின் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக சடலம் சம்பூர் பொலிஸாரினால் நேற்று மாலை கைப்பற்றபட்டு பிரேத பரிசோதனைக்காக இன்று திருகோணமலை பொது வைத்திசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
டெங்கு நோயின் தாக்கத்தினாலே மரணம் சம்பவித்தாகவும் அதனாலயே சடலத்தை அவசரமாக புதைக்க முட்பட்டபோதும் சம்பூர் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவரின் கணவர் ஒரு வருடத்தின் முன் வேறு திருமணம் முடித்து இறந்தவரை கைவிட்டு சென்றதாக அறிய முடிகிறது.