பொகவந்தலாவையில் ஆணின் சடலம் மீட்பு..!

நோட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்திரன்-
பொகவந்தலா தேயிலை தொழிற்சாலை காட்டுப்பகுதியில் உறுகுழைந்த நிலையில் ஆணின் சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். பொகவந்தலா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகலை மேல் பிரிவைச்சேர்ந்த 43 வயதுடைய முனியான்டி சங்கர் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். 

கடந்த பத்து நாட்களாக காணவில்லை என பொகவந்தலா பொலிஸ் நிலையத்தில் உறவினர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் 21.03.2017 மாலை தேயிலை தொழிற்சாலையை அன்மித்த மாணா புல் காட்டில் சடலமாக மீட்ப்பட்டுள்ளார். மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வருவாகவும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் வலிப்பு நோயில் பாதிக்கப்பட்டவரென பொலிஸார் தெரிவித்ததுடன் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -