யு ஆ கீத் திருகோணமலை-
திருகோணமலை கோமரங்கடவல பிரதேதேசத்தில் பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி 3 கிலோவை தம்முடன் வைத்திருந்த இரு பெண்கள் உட்பட ஆண் ஒருவரும் இன்று வவுனியா வீதியில் திரியாய் சந்தியில் வைத்து வனஜீவராசி தினைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டனர். தாம் 1800 ரூபாவிற்கு இதனை வாங்கியதாகவும் இதனை வென்னப்புவ பிரதேசத்திற்கு கொண்டு செல்லும் வழியில் தம்மை அதிகாரிகள் கைது செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். மூவரையும் அவர்கள் பயனித்த வேணையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுமான நடைவடிக்கையை வனஜீவராசி தினைக்கள அதிகாரிகள் மேற்கொண்டனர்.

