மோட்டார் சைக்கிள் விபத்துஇ அண்ணனும்.தங்கையும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை.ஹொரவ்பொத்தான பிரதான வீதி பன்குளம் பகுதியில் இன்று (23) பிற்பகல் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அண்ணனும்.தங்கையும் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் புத்தளம்.குபுக்கல்ல.ரம்பாவெவ பகுதியைச்சேர்ந்த பீ.என்.தினேஸ் குமாரசிறி (33வயது) பீ.எல்.டில்சானி குமாரசிறி (27வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளத்திலிருந்து திருகோணமலையிலுள்ள கல்வி அமைச்சுக்கு இன்று அதிகாலை இடமாற்றம் தொடர்பான கடிதத்தினை எடுத்து விட்டு செல்லும் வேளை மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் தெரியவருகின்றது.

விபத்து தொடர்பாக மொறவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -